ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற விதியில் என்ன தவறு உள்ளது என ஓசூரில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ராமானுஜ ஜீயர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஓசூரில் பெங்களூரு சாலையில் தர்கா என்ற இடத்தில் புதிய ஜவுளி கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீ செண்டலங்கரா செண்பக மன்னர் சம்பத்குமார ராமானுஜ ஜீயர், குத்துவிளக்கு ஏற்றி வைத்து அனைவரையும் வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அயோத்தி கோயிலின் தீர்த்தத்தை பிரசாதமாக வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ செண்டலங்கரா செண்பக மன்னர் சம்பத்குமார ராமானுஜ ஜீயர், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? சிலருக்கு அவர்களது அப்பா பெயர் மறந்து விட்டது. தங்களது அப்பா பெயர்களை சொல்ல பயந்து வருகிறார்கள். ஏன் பயப்பட வேண்டும்? நாம் இருப்பது ஒரே நாட்டில் தான். நாம் வேறு ஒரு நாட்டில் வாழவில்லை, ஒரே நாடு தான் என்று சொல்லிக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. சம்பிரதாயமாக ஒரு வீட்டில் ஒரு பூஜை, ஒரு வீட்டில் ஒரு தலைவர், அதேபோல் தான் நமது நாடு நமது தேர்தல், அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதில் தவறு இல்லை என கூறினார்.

01:40Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!
2000:00ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? ஓசூரில் ராமானுஜ ஜீயர் பேட்டி
00:50பாஜகவிற்கு தில்லு, தைரியம் இருந்தால் இதை செய்து காட்டுங்கள் - கே.பி.முனுசாமி பகிரங்க சவால்
02:00ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் ரதத்திற்கு ஓசூரில் தேவாரம் பாடி சிவ பக்தர்கள் சிறப்பு வரவேற்பு
03:11ஆ.ராசாவுக்கு ஆப்பு.. பாஜக உடன் கூட்டணி? நடிகர் விஜய்க்கு வாழ்த்து.. அதிரடி காட்டும் இபிஎஸ்..!
03:01ஓசூரில் முதன்முறையாக நடைப்பெற்ற மார்கழியில் மக்களிசை, திரளான ரசிகர்கள் பங்கேற்பு
02:46கிருஷ்ணகிரியில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த எம்.பி. செல்லகுமார்
00:30வெயிலுக்கு இதமாக குடும்பத்தோடு ஏரியில் கும்மாளம் போடும் காட்டு யானைகள்
00:53சாலையில் நடந்து சென்ற சிறுமியை சுத்துபோட்ட தெரு நாய்கள்; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி