கிருஷ்ணகிரியில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த எம்.பி. செல்லகுமார்

கிருஷ்ணகிரியில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த எம்.பி. செல்லகுமார்

Published : Nov 21, 2023, 05:38 PM IST

எலத்தகிரி புனிதா அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள எலத்தகிரி புனித  அந்தேணியர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்ற மாணவ, மாணவிகளின் வசதிக்காக கூடுதல் கட்டிடம் வேண்டும் என கிருஷ்ணகிரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டது.

கட்டிமுடிக்கப்பட்ட கூடுதல் பள்ளிக்கூடத்தின் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. பங்குதந்தை மார்டின் கிறிஸ்துதாஸ் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு. அழைப்பாளராக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் கலந்துக்கொண்டு  பள்ளி, மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்து பல்வேறுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாரட்டி பேசினார். 

01:40Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!
2000:00ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? ஓசூரில் ராமானுஜ ஜீயர் பேட்டி
00:50பாஜகவிற்கு தில்லு, தைரியம் இருந்தால் இதை செய்து காட்டுங்கள் - கே.பி.முனுசாமி பகிரங்க சவால்
02:00ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் ரதத்திற்கு ஓசூரில் தேவாரம் பாடி சிவ பக்தர்கள் சிறப்பு வரவேற்பு
03:11ஆ.ராசாவுக்கு ஆப்பு.. பாஜக உடன் கூட்டணி? நடிகர் விஜய்க்கு வாழ்த்து.. அதிரடி காட்டும் இபிஎஸ்..!
03:01ஓசூரில் முதன்முறையாக நடைப்பெற்ற மார்கழியில் மக்களிசை, திரளான ரசிகர்கள் பங்கேற்பு
02:46கிருஷ்ணகிரியில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த எம்.பி. செல்லகுமார்
00:30வெயிலுக்கு இதமாக குடும்பத்தோடு ஏரியில் கும்மாளம் போடும் காட்டு யானைகள்
00:53சாலையில் நடந்து சென்ற சிறுமியை சுத்துபோட்ட தெரு நாய்கள்; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி