Video : கிருஷ்ணகிரி இளைஞர் படுகொலை விவகாரம்! - இருவர் சேலம் நீதிமன்றத்தில் சரண்!

Video : கிருஷ்ணகிரி இளைஞர் படுகொலை விவகாரம்! - இருவர் சேலம் நீதிமன்றத்தில் சரண்!

Published : Mar 23, 2023, 04:06 PM IST

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த இருவர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
 

கிருஷ்ணகிரி அருகே உள்ள திட்டம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரும் அவதானப்பட்டி பகுதியை சேர்ந்த சரண்யா என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெகன் இருசக்கர வாகனத்தில் தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது, அணைரோடு மேம்பாலம் பகுதியில் சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் ஜெகனை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் இருந்து அவரை கீழே தள்ளி தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ஜெகனை வெட்டினர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தங்களின் செல்போன்களில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டனர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து சங்கர் கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் தலைமறைவாக இருந்த உறவினர்கள் இரண்டு பேரை பிடிக்க இரண்டு தனி படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த நாகராஜ் மற்றும் முரளி ஆகியோர் சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
 

00:22கிருஷ்ணகிரி: 3 மாதம் மழை இல்லை.. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை.. கிடா வெட்டி கிராம மக்கள் வழிபாடு..
01:40Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!
2000:00ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? ஓசூரில் ராமானுஜ ஜீயர் பேட்டி
00:50பாஜகவிற்கு தில்லு, தைரியம் இருந்தால் இதை செய்து காட்டுங்கள் - கே.பி.முனுசாமி பகிரங்க சவால்
02:00ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் ரதத்திற்கு ஓசூரில் தேவாரம் பாடி சிவ பக்தர்கள் சிறப்பு வரவேற்பு
03:11ஆ.ராசாவுக்கு ஆப்பு.. பாஜக உடன் கூட்டணி? நடிகர் விஜய்க்கு வாழ்த்து.. அதிரடி காட்டும் இபிஎஸ்..!
03:01ஓசூரில் முதன்முறையாக நடைப்பெற்ற மார்கழியில் மக்களிசை, திரளான ரசிகர்கள் பங்கேற்பு
02:46கிருஷ்ணகிரியில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த எம்.பி. செல்லகுமார்
00:30வெயிலுக்கு இதமாக குடும்பத்தோடு ஏரியில் கும்மாளம் போடும் காட்டு யானைகள்
00:53சாலையில் நடந்து சென்ற சிறுமியை சுத்துபோட்ட தெரு நாய்கள்; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
Read more