ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் நீர் வரத்தால் திடீர் வெள்ளப்பெருக்கு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் நீர் வரத்தால் திடீர் வெள்ளப்பெருக்கு

Published : May 03, 2023, 12:06 PM IST

வன பகுதியில் ஆங்காங்கே கன மழை பெய்ததால் தமிழக எல்லையான பிலிகுண்டுளவில் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு கடந்த இரண்டு மாதமாக 500 கன அடி முதல் 1000 கன அடி வரை மாறி மாறி குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள வனப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதால் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவிலும் தற்போது நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. கோடை விடுமுறை என்பதால் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இந்த சூழ்நிலையில் நீர்வரத்து அதிகரித்து வருவதை சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு பின்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

00:22கிருஷ்ணகிரி: 3 மாதம் மழை இல்லை.. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை.. கிடா வெட்டி கிராம மக்கள் வழிபாடு..
01:40Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!
2000:00ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? ஓசூரில் ராமானுஜ ஜீயர் பேட்டி
00:50பாஜகவிற்கு தில்லு, தைரியம் இருந்தால் இதை செய்து காட்டுங்கள் - கே.பி.முனுசாமி பகிரங்க சவால்
02:00ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் ரதத்திற்கு ஓசூரில் தேவாரம் பாடி சிவ பக்தர்கள் சிறப்பு வரவேற்பு
03:11ஆ.ராசாவுக்கு ஆப்பு.. பாஜக உடன் கூட்டணி? நடிகர் விஜய்க்கு வாழ்த்து.. அதிரடி காட்டும் இபிஎஸ்..!
03:01ஓசூரில் முதன்முறையாக நடைப்பெற்ற மார்கழியில் மக்களிசை, திரளான ரசிகர்கள் பங்கேற்பு
02:46கிருஷ்ணகிரியில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த எம்.பி. செல்லகுமார்
00:30வெயிலுக்கு இதமாக குடும்பத்தோடு ஏரியில் கும்மாளம் போடும் காட்டு யானைகள்
00:53சாலையில் நடந்து சென்ற சிறுமியை சுத்துபோட்ட தெரு நாய்கள்; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
Read more