மகனை கடித்த பாம்பை பிடித்து தண்ணீர் பாட்டிலில் அடைத்து எடுத்து வந்த தாயால் பரபரப்பு!

மகனை கடித்த பாம்பை பிடித்து தண்ணீர் பாட்டிலில் அடைத்து எடுத்து வந்த தாயால் பரபரப்பு!

Published : Feb 23, 2023, 12:46 PM IST

போச்சம்பள்ளி அருகே குப்பை கொட்ட போன இடத்தில், பாம்பு கடிபட்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மகனை கடித்த பாம்பை தண்ணீர் பாட்டிலில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த தாயால் பரபரப்பு ஏற்பட்டது.
 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் பூவரசன். பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் உள்ள விவசாய தொழிலை பார்த்து வந்த இவர் வீட்டின் மாட்டு தொழுவத்தில் உள்ள மாட்டு சாணம் மற்றும் குப்பைகளை அள்ளி கூடையில் கொண்டு சென்று வீட்டில் அருகாமையில் உள்ள குப்பையில் கொட்டியுள்ளார் அப்பொழுது குப்பையில் மறைந்திருந்த பாம்பு பூவரசனை கடித்துள்ளது. இதில் அலறி துடித்த பூவரசன் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த பொழுது பாம்பு அவரை கடித்துவிட்டு குப்பையின் அருகே ஊர்ந்து சென்றுள்ளது. அதனை லாபமாக பிடித்த அப்பகுதி மக்கள் அந்த பாம்பினை வாட்டர் பாட்டிலில் அடைத்து வைத்தனர்.

பின்னர் பாம்பு கடித்த பூவரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு இருசக்கர வாகனத்தில் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அப்பொழுது அங்கு பணியில் இருந்த மருத்துவர் அவருக்கு வேண்டிய முதலுதவி மருத்துவ சிகிச்சைகள் அளித்து ரத்தம் பரிசோதனைக்காக எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பூவரசனை கடித்த பாம்பினை அவரது தாயார் கோமதி தண்ணீர் பாட்டிலில் அடைத்து அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்து வந்தார். வாட்டர் பாட்டிலில் பாம்பு இருப்பதைக் காண மருத்துவமனையில் இருந்த மக்கள் திரண்டதால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

00:22கிருஷ்ணகிரி: 3 மாதம் மழை இல்லை.. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை.. கிடா வெட்டி கிராம மக்கள் வழிபாடு..
01:40Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!
2000:00ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? ஓசூரில் ராமானுஜ ஜீயர் பேட்டி
00:50பாஜகவிற்கு தில்லு, தைரியம் இருந்தால் இதை செய்து காட்டுங்கள் - கே.பி.முனுசாமி பகிரங்க சவால்
02:00ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் ரதத்திற்கு ஓசூரில் தேவாரம் பாடி சிவ பக்தர்கள் சிறப்பு வரவேற்பு
03:11ஆ.ராசாவுக்கு ஆப்பு.. பாஜக உடன் கூட்டணி? நடிகர் விஜய்க்கு வாழ்த்து.. அதிரடி காட்டும் இபிஎஸ்..!
03:01ஓசூரில் முதன்முறையாக நடைப்பெற்ற மார்கழியில் மக்களிசை, திரளான ரசிகர்கள் பங்கேற்பு
02:46கிருஷ்ணகிரியில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த எம்.பி. செல்லகுமார்
00:30வெயிலுக்கு இதமாக குடும்பத்தோடு ஏரியில் கும்மாளம் போடும் காட்டு யானைகள்
00:53சாலையில் நடந்து சென்ற சிறுமியை சுத்துபோட்ட தெரு நாய்கள்; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி