கரூரில் ஆட்சியருக்காக நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட மழலைகள்

கரூரில் ஆட்சியருக்காக நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட மழலைகள்

Published : Mar 06, 2024, 05:19 PM IST

கரூரில் மாவட்ட ஆட்சியரை வரவேற்பதற்காக அரசு பள்ளி மாணவ மாணவிகள் கடும் வெயிலில் நிற்கவைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதி பாளையத்தில் அமைந்துள்ள தாந்தோணிமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், பள்ளியில் நடப்பாண்டு புதிதாக சேரும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பை, சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கி, மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் அரை மணி நேரத்திற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரை வரவேற்பதற்காக பள்ளி முன்பு சாலையில் கடும் வெயிலில் பள்ளி மாணவ மாணவிகளான சிறுவர், சிறுமியர் நிற்கவைக்கப்பட்டனர். கடும் வெயிலில் மாணவர்கள் நிற்பதை செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்ததை பார்த்தவுடன் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில்களை வழங்கினர். மாவட்ட ஆட்சியரை வரவேற்பதற்காக கோடைகாலத்தில் மாணவர்களை வெயிலில் நிற்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

02:53 ஆஹா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி! கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம்..!
08:46"திமுக தேர்தல் அறிக்கையை கசக்கி வீச வேண்டும்".. கரூரில் நடந்த பாஜக செயல்வீரர்கள் கூட்டம் - சீரிய அண்ணாமலை!
01:47சீரும், சிறப்புமாக நடைபெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்
01:22அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறை; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அகற்றப்படாத விளம்பரங்கள்
03:08ஹெல்மெட்டோட வாங்க, டிபன் பாக்சோட போங்க; கரூர் போலிசார் விப்புணர்வு
03:10கரூரில் ஆட்சியருக்காக நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட மழலைகள்
03:56திமுகவில் வாரிசு இருக்கு.. உங்களுக்கு இல்லையா ஆஸ்பத்திரிக்கு போங்க.. பங்கமாக கலாய்த்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
01:35பயணிகளின் உயிரை பணயம் வைக்கும் ஓட்டுநர்கள்; கரூரில் நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
01:36கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க கரூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவை வடம் பிடித்து இழுத்தனர்