அமைச்சர் சொல்லி தான் கூடுதலா பணம் வாங்றோம்; டாஸ்மாக் ஊழியரின் பேச்சால் பரபரப்பு

அமைச்சர் சொல்லி தான் கூடுதலா பணம் வாங்றோம்; டாஸ்மாக் ஊழியரின் பேச்சால் பரபரப்பு

Published : Aug 12, 2023, 09:26 AM IST

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டு அருகே டாஸ்மாக் கடையில் அதிக விலைக்கு மது விற்கப்பட்ட நிலையில், அதனை மது பிரியர் ஒருவர் தட்டிக்கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம்ம புளியம்பட்டி அருகே எரங்காட்டுபாளையம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மதுப்பிரியர்கள் மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மதுபான கடை திறந்தவுடன் வந்த வாடிக்கையாளர் 130 விலையுள்ள மதுபானத்தை வாங்கியுள்ளார். அதற்கு விற்பனையாளர் நடராஜ் என்பவர் கூடுதலாக ஐந்து ரூபாய் கேட்டுள்ளார். ஐந்து ரூபாய் கொடுக்காவிட்டால் மது தர முடியாது எனவும், இதை யாரிடம் வேண்டுமானாலும் சொல்லலாம். வீடியோ மூலமாக அரசு அதிகாரி அமைச்சர்கள் யாரிடம் வேணா தெரிவித்துக் கொள்ளலாம் என நடராஜ் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது

மதுபான பாட்டில்களை  அமைச்சர் தான் ஐந்து ரூபாய் கூடுதலாக வாங்க கூறினார் என கூறியதால் அதிர்ச்சி அடைந்த மது பிரியர் தான் கொடுத்த பணத்திலிருந்து பத்து ரூபாயை மீண்டும் கேட்டுள்ளார். இதை தர மறுத்த விற்பனையாளர் நடராஜ் யாரிடம் வேணாலும் கூறிக்கொள் அதைப்பற்றி கவலை இல்லை. மதுவை கூலிங்காக வைப்பதற்கு கரண்ட் பில் கொடுப்பதற்காக ஐந்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாகவும் அதுபோக மதுபான கடை இடத்திற்கு சொந்தமான உரிமையாளருக்கு மாதம் வாடகை கொடுக்கவும் ஐந்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக கூறியதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

03:22Train : "இது என்ன சதாப்திக்கு வந்த சோதனை".. கனமழையால் Super Fast ரயிலில் ஒழுகிய மழை நீர் - மக்கள் அவதி! Video!
01:35சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் பெய்த திடீர் கோடை மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி.!!
12:19மோடி எத்தனைமுறை தமிழகம் வந்தாலும் பாஜகவிற்கு யாரும் வாக்களிக்கப் போவதில்லை - தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி!
00:58சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி! மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டம்.!
02:06வாக்காளர்களுக்கு விநியோகிக்க கோவையில் இருந்து எடுத்து வரப்பட்ட 13 கி. வெள்ளி? அதிகாரிகள் அதிரடி சோதனை
10:06நான் தேர்தலில் போட்டியிடுவேன்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா பேட்டி!
02:04பரிசலில் ஆடி அசைந்து மறுகரை வந்த பண்ணாரி மாரியம்மன்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து வரவேற்பு
02:19திமுக ஒன்றிய செயலாளர் கொலை.. குற்றவாளிகள் ஐந்து பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்..
02:11பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆம்னி வேன் மீது மோதிய தனியார் பேருந்து.. ஈரோடு அருகே பரபரப்பு
00:43ஈரோட்டில் லாரியை வழிமறித்து கரும்புகளை ருசி பார்த்த காட்டு யானை; ஓட்டுநரை துரத்தி அட்ராசிட்டி
Read more