ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினர் டூப் பிரச்சாரம்!

Feb 18, 2023, 12:20 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.  இந்தநிலையில் இந்த தேர்தல் திமுக ஆட்சி அமைந்து 21 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் திமுக அமைச்சர்கள் 30 பேரும், திமுகவின் அணைத்து அணிகளின் நிர்வாகிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த தேர்தல் திமுகவின் 21 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் சான்றிதழ்  என தீவிரவமாக களத்தில் இறங்கியுள்ளனர். அண்ணா, கலைஞர் முதல்வர் ஸ்டாலின் போன்று  டூப் போட்டு திமுகவினர் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்