Watch : நகராட்சி கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து பாஜகவினர் கோஷம்! பாஜக மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்!

Watch : நகராட்சி கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து பாஜகவினர் கோஷம்! பாஜக மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்!

Published : Sep 23, 2022, 06:59 PM IST

பவானி நகராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முன் அனுமதியின்றி பாஜகவினர் கொடியுடன் அத்துமீறி நுழைந்த கோஷமிட்டனர்.
பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையாளர் போலீசில் புகாரளித்தார்.
 

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது,

அப்போது எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பா.ஜ.க வின் நகர செயலாளர் நந்தகுமார் என்பவர் தலைமையில் 20 பேர் கையில் கொடிகளை ஏந்திக்கொண்டு நகர் மன்ற கூட்டத்தை நடத்த விடாமல் செய்யும் வகையில், சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட நபர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் மேலும் தேசிய கீதம் பாடப்பட்ட பொழுது, அவமதிக்கும் வகையில் கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.

எனவே இத்தகைய செயல்களில் ஈடுபட்ட பாஜகவினர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி பவானி காவல் நிலையத்தில் நகராட்சி ஆணையாளர் தாமரை புகார் மனு அளித்துள்ளார். தொடர்ந்து புகாரைப் பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

03:22Train : "இது என்ன சதாப்திக்கு வந்த சோதனை".. கனமழையால் Super Fast ரயிலில் ஒழுகிய மழை நீர் - மக்கள் அவதி! Video!
01:35சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் பெய்த திடீர் கோடை மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி.!!
12:19மோடி எத்தனைமுறை தமிழகம் வந்தாலும் பாஜகவிற்கு யாரும் வாக்களிக்கப் போவதில்லை - தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி!
00:58சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி! மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டம்.!
02:06வாக்காளர்களுக்கு விநியோகிக்க கோவையில் இருந்து எடுத்து வரப்பட்ட 13 கி. வெள்ளி? அதிகாரிகள் அதிரடி சோதனை
10:06நான் தேர்தலில் போட்டியிடுவேன்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா பேட்டி!
02:04பரிசலில் ஆடி அசைந்து மறுகரை வந்த பண்ணாரி மாரியம்மன்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து வரவேற்பு
02:19திமுக ஒன்றிய செயலாளர் கொலை.. குற்றவாளிகள் ஐந்து பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்..
02:11பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆம்னி வேன் மீது மோதிய தனியார் பேருந்து.. ஈரோடு அருகே பரபரப்பு
00:43ஈரோட்டில் லாரியை வழிமறித்து கரும்புகளை ருசி பார்த்த காட்டு யானை; ஓட்டுநரை துரத்தி அட்ராசிட்டி