22 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்ட உதகை மலை ரயில்; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

22 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்ட உதகை மலை ரயில்; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Published : Dec 14, 2023, 12:58 PM IST

மழை, மண்சரிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதகை மலை ரயில் சேவை 22 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் தொடங்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்க பட்டு வரும் மலை ரயில் போக்குவரத்து நூற்றாண்டு பழமை வாய்ந்தது. கல்லார் முதல் குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதிக்குள்  பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட மலை ரயில் பாதையில்  செல்லும் வழியில் மலை முகடுகள், நீர் வீழ்ச்சி, பாறை குகைகள், வானுயர்ந்த மரம் என மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் கொட்டி கிடக்கும் இயற்கை அழகினை கண்டு ரசிக்க பெரும்பாலும் இந்த மலை ரயிலில் பயணிக்க உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாதக்கணக்கில் முன்பதிவு செய்து இந்த ரயிலில் பயணம் செய்ய காத்திருக்கும் பயணிகளுக்கு மழை காலங்களில் மிகவும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை துவங்கியது முதலே நீலகிரி மாவட்டத்திலும் மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம், கல்லார், ஹில்கிரோ என பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட துவங்கியது.

அடுத்தடுத்து தொடர்ந்து மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்படுவது, பாறைகள் விழுவது என ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்து வந்த நிலையில் அதனை சீரமைக்கும் பணியும் நடைபெற்றது. இருப்பினும் அதிகப்படியான மழை காரணமாக மீண்டும் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் நான்கு முறை ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில் இறுதியாக மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யபட்டது.

இதனையடுத்து தற்போது சற்றே மழைப்பொழிவு குறைந்துள்ள நிலையில் இன்று 22 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் போக்குவரத்து துவங்கபட்டுள்ளது. இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 7.10 மணிக்கு முன்பதிவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் உதகை புறப்பட்டு சென்றது.

நீண்ட நாட்களாக முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை துவங்க பட்டதால் மிகுந்த உற்சாகத்துடன் மலை ரயில் பயணித்தனர். மேலும் சிலர் ரயில் செல்வதற்கு  முன்பாக பாரம்பரியம் மிக்க மலை ரயில் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!
02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Read more