Watch : புதுவை எம்எல்ஏ நேரு விவகாரம்! தலைமை செயலாளருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Watch : புதுவை எம்எல்ஏ நேரு விவகாரம்! தலைமை செயலாளருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Published : Jun 07, 2023, 05:09 PM IST

புதுச்சேரியில் தலைமை செயலருடன் சுயேட்சை எம்எல்ஏ நேரு மோதலில் ஈடுபட்ட சம்பவத்தின் எதிரொலியாக,  தலைமை செயலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமை செயலாளருக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
 

புதுச்சேரி மாநில தலைமை செயலர் ராஜீவ் வர்மாவை சுயேட்சை எம்எல்ஏ நேரு அரசு விழாவில் புகுந்து விமர்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எம்எல்ஏ நேரு மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமை செயலருக்கு எதிராக பல்வேறு சமூக அமைப்புகள் குரல் எழுப்பின. தலைமை செயலர் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி நேற்று அவசரமாக சந்தித்து பேசினார். அதன்பிறகு தலைமை செயலருக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவர் போலீஸ் பாதுகாப்புடன் சட்டசபைக்கு வந்து சபாநாயகர் செல்வத்தை சந்தித்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலகத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு பேரிகார்டுகள் போடப்பட்டு 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. தலைமை செயலகத்துக்கு வரும் பொதுமக்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு அதிகாரிகளை சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. எந்த நேரத்திலும் மக்கள் பிரதிநிதிகள் அங்கு பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் குதிக்கலாம் என்பதால் தலைமை செயலகத்தை சுற்றிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள,  பாதுகாப்பு நடவடிக்கைகளால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
புதுச்சேரி இலக்கியத் திருவிழா 2024: இந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி ஷமிகா ரவி பேச்சு
புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் ஶ்ரீ அரவிந்தரின் 'ஆர்யா' இதழ் குறித்து சுப்ரமணி ராமசாமி பேச்சு
"விளம்பரத்துக்காக வீணாகும் மக்கள் பணம்" Pondy Lit Fest 2024ல் அனல் பறந்த விவாதம்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு தோன்றியது எப்போது? Pondy Lit Fest 2024ல் மனம் திறந்த அரவிந்தன்!
"புதிய இந்தியா" அதுவே பாரத் சக்தியின் நோக்கம் - Pondy Lit Fest 2024ல் பேசிய ஆளுநர் ரவி!
உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா? நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அலறவிட்ட இளைஞர்கள்!
இளமை திரும்புதே; ஸ்டைலாக பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
01:29புதுச்சேரி துணைநிலை ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்று முதல்வர் ரங்கசாமி
01:31புதுவையில் இரிடியம் கடத்தலா? நாராயண சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - அதிமுக