பெண் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி செல்போனை திருடிய மர்ம நபர்; சிசிடிவியால் அம்பலம்

பெண் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி செல்போனை திருடிய மர்ம நபர்; சிசிடிவியால் அம்பலம்

Published : Jun 17, 2023, 09:59 AM IST

புதுச்சேரி மெடிக்கல் லேப் பெண் ஊழியரிடம் டெஸ்ட் ரிப்போர்ட்டை காட்டுவது போல் காட்டி நூதன முறையில் செல்போன் திருடிய மர்ம நபர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு லெனின் வீதியில் தனியார் லேப் மெடிக்கல் ஒன்று அமைந்துள்ளது. இங்கு தாட்சாயிணி என்ற டெக்னீசியன் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், தாட்சாயிணியிடம் பேசி கொண்டு தன்னிடம் இருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை காட்டுகிறார். இதற்கு டெக்னீசியன் பதில் அளித்தும் மறுபடியும் மெடிக்கல் ரிப்போர்ட்டை காட்டுவது போல் காட்டி கையில் இருந்த வெள்ள பேப்பரை, செல்போன் மீது வைத்து லாவகமாக செல்போனை திருடி சென்றார்.

இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து செல்போனை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்த லேப் டெக்னீசியன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு செல்போனை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெடிக்கல் லேபுக்கு வந்த ஒரு வாலிபர் ரிப்போர்ட்டை காட்டுவது போல் காட்டி செல்போனை திருடி சென்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
புதுச்சேரி இலக்கியத் திருவிழா 2024: இந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி ஷமிகா ரவி பேச்சு
புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் ஶ்ரீ அரவிந்தரின் 'ஆர்யா' இதழ் குறித்து சுப்ரமணி ராமசாமி பேச்சு
"விளம்பரத்துக்காக வீணாகும் மக்கள் பணம்" Pondy Lit Fest 2024ல் அனல் பறந்த விவாதம்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு தோன்றியது எப்போது? Pondy Lit Fest 2024ல் மனம் திறந்த அரவிந்தன்!
"புதிய இந்தியா" அதுவே பாரத் சக்தியின் நோக்கம் - Pondy Lit Fest 2024ல் பேசிய ஆளுநர் ரவி!
உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா? நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அலறவிட்ட இளைஞர்கள்!
இளமை திரும்புதே; ஸ்டைலாக பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
01:29புதுச்சேரி துணைநிலை ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்று முதல்வர் ரங்கசாமி
01:31புதுவையில் இரிடியம் கடத்தலா? நாராயண சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - அதிமுக