செந்நிறமாக மாறிய கடல்; இயற்கை பேரிடரின் அறிகுறியா? புதுவையில் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

செந்நிறமாக மாறிய கடல்; இயற்கை பேரிடரின் அறிகுறியா? புதுவையில் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

Published : Oct 18, 2023, 12:34 PM IST

ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கடல் அலைகளை செல்பி எடுத்தும் வீடியோ எடுத்தும் வருகின்றனர்.

புதுச்சேரி கடல்பகுதி கடந்த இரண்டு தினங்களாக அலை சீற்றத்துடனும், கடல் கொந்தளிப்புடனும் காணப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடல் பகுதி காலை முதலே சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது. இந்த செய்தி புதுச்சேரி முழுவதும் வேகமாக பரவவே ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர்.

அவர்கள் கடலில் சிவப்பாக உள்ள பகுதிகளை வீடியோவாக பதிவு செய்தும், கடல் முன்பு நின்று செல்பி எடுத்தும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் கடலில் இறங்கி நிற்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வரும் பொது மக்களை கண்காணிக்க போலீசாரும் கடற்கரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் திடீரென்று கடல் பகுதி சிவப்பு நிறமாக மாறி காட்சியளிக்கும் சம்பவம் புதுச்சேரி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த நிற மாற்றம் இயற்கை பேரிடருக்கான அறிகுறியாக இருக்கலாமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் உள்ளது.

பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
புதுச்சேரி இலக்கியத் திருவிழா 2024: இந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி ஷமிகா ரவி பேச்சு
புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் ஶ்ரீ அரவிந்தரின் 'ஆர்யா' இதழ் குறித்து சுப்ரமணி ராமசாமி பேச்சு
"விளம்பரத்துக்காக வீணாகும் மக்கள் பணம்" Pondy Lit Fest 2024ல் அனல் பறந்த விவாதம்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு தோன்றியது எப்போது? Pondy Lit Fest 2024ல் மனம் திறந்த அரவிந்தன்!
"புதிய இந்தியா" அதுவே பாரத் சக்தியின் நோக்கம் - Pondy Lit Fest 2024ல் பேசிய ஆளுநர் ரவி!
உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா? நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அலறவிட்ட இளைஞர்கள்!
இளமை திரும்புதே; ஸ்டைலாக பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
01:29புதுச்சேரி துணைநிலை ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்று முதல்வர் ரங்கசாமி
01:31புதுவையில் இரிடியம் கடத்தலா? நாராயண சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - அதிமுக
Read more