
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, மீனாட்சி பாலம் அருகே உள்ள சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவின் புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் நேரடி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரும் பாறைகளும் மண்ணும் சரிந்து விழும் அந்த கணத்தில், அங்கிருந்த தொழிலாளர்களும் பொதுமக்களும் நூலிழையில் அலறியடித்து ஓடி உயிர் பிழைக்கும் நெஞ்சை உலுக்கும் காட்சிகள் இதில் பதிவாகியுள்ளன. இந்த விபரீத சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தற்போது ராணுவ வேகத்தில் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.