வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை…. இன்று மாலையில் இருந்து தொடங்குது மழை…. அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகுது !!

By Selvanayagam PFirst Published Nov 6, 2018, 9:00 AM IST
Highlights

இலங்கை அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால் தென் தமிழகத்தில் இன்று பிற்பகலில் இருந்து கனமழை பெய்யும் என்றும்  அடுத்த 2 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு பலத்த மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி பெய்து வருகிறது. தற்போது அது வலுவடைந்து இருக்கிறது. இதனால் தென் தமிழகத்திலும், வட தமிழகத்திலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும். அதிலும் குறிப்பாக நாளையும் நாளை மறு நாளும்  தென் தமிழகத்தில் கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் இலங்கை அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் இன்று  தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, மேற்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை முதல் குமரிக்கடல் பகுதியில் 8-ந் தேதிக்குள் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக தென் தமிழகத்தில் சில இடங்களில் 7-ந் தேதி (நாளை), 8-ந் தேதி (நாளை மறுநாள்) மிக கனமழை இருக்கும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரையில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடைவெளிவிட்டு மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

click me!