மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், 'முதற்கட்டமாக 717 மதுக்கடைகளை மூடியுள்ளோம். மதுக்கடைகளை படிப்படியாக மூட முயற்சி எடுப்போம்' என்றார். தொடர்ந்து பேசிய அவர், 'நீட் தேர்வு தேவையில்லாத ஒன்று. அதை கூட ஒன்றிய அரசால் சரியாக நடத்த முடியவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டதால் மானவர்கள் மிகப்பெரிய மன உளைச்சலில் உள்ளனர்'' என்று கூறியுள்ளார்.