தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பதிவாகி வருகிறது. விழுப்புரம், கடலூர், திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.
இந் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மட்டும் வெப்பச்சலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.