மக்களே கவனம்… தமிழகத்தில் 4 நாள்… பிச்சு உதற போகுதாம் மிக கனமழை…!

By manimegalai aFirst Published Oct 3, 2021, 8:35 AM IST
Highlights

தமிழகத்தில் இன்று கனமழையும், நாளை முதல் 4 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் இன்று கனமழையும், நாளை முதல் 4 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நாமக்கல், ஈரோடு, விழுப்புரம், கோவை, நீலகிரி என மழை அதிகளவு பதிவாகி வருகிறது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில் தமிழகத்தில் இன்று கனமழையும், நாளை முதல் மிக கனமழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் தென்காசி, திண்டுக்கல், தேனி, மதுரை, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும். நாளை தென் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும், கோவை, அரியலூர்,சேலம், ஈரோடு, தருமபுரி, டெல்டா மாவட்டங்கள்ல இடியுடன் கனமழை பெய்யும். வரும் 5ம் தேதி, 6ம் தேதிகளில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

click me!