நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை நீலகிரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
03:17 PM (IST) Aug 02
சினிமா பைனான்ஸியர் அன்புச்செயலுக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து, ரூபாய் 13 கோடி ரொக்கப்பணம் சிக்கியுள்ளது. அன்பு செழியனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...
02:17 PM (IST) Aug 02
மதுபோதையில் இருந்த மருமகன் மாமனார் மற்றும் மாமியாரை கொடூரமாக தாக்கினார். இதில், மாமனார் உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
01:45 PM (IST) Aug 02
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகருக்கு கடந்த 2019-ம் ஆண்டே கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இளங்கோவன் என்பவரின் மகள் கீர்த்தனாவுடன் திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால் இவருக்கு இதுவரை நடைபெற வில்லை.மேலும் படிக்க
01:26 PM (IST) Aug 02
திருப்பதி கோயிலில் இதுவரை இல்லாத அளவாக கடந்த ஜூலை மாதம் காணிக்கையாக 139 கோடி ரூபாய் வசூலித்து ஏழுமலையான் கோவில் உண்டியல் சாதனை படைத்துள்ளது.
12:26 PM (IST) Aug 02
தமிழக மக்களின் வருமானம் ஆண்டுக்கு 6% உயராதபோது மின்கட்டணம் 6% உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும் என்று ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
12:01 PM (IST) Aug 02
அரக்கோணம் அருகே பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து பொது மக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
11:59 AM (IST) Aug 02
யூடியூப் சேனல் நடத்தி வரும் இளைஞர் ஒருவரை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி துணை நடிகை திவ்யபாரதி என்பவர் ரூ.30 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திவ்யபாரதி தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தாடிக்கொம்பு போலீஸில் புகார் அளித்துள்ளார் ஆன்ந்த்ராஜ். மேலும் படிக்க
10:09 AM (IST) Aug 02
சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு நடக்கும் நிலையில் தி.நகரில் தாணு அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
09:50 AM (IST) Aug 02
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
09:47 AM (IST) Aug 02
ஒரு பக்கம் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு மறுபக்கம் அதனைப் பிடுங்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
09:13 AM (IST) Aug 02
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி கட்ட விசாரணை நடைபெறவுள்ளது.
07:40 AM (IST) Aug 02
சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், இரவின் நிழல் படத்தை உலகின் முதல் Non-linear திரைப்படம் என பார்த்திபன் குறிப்பிடுவது பொய் என்றும், இதன்மூலம் அவர் ரசிகர்களை ஏமாற்றி இருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்நிலையில், அதற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் பார்த்திபன்.மேலும் படிக்க
07:28 AM (IST) Aug 02
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்ததாக சிஎன்என் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.
07:27 AM (IST) Aug 02
காதல் மனைவியை குத்திக்கொலை செய்த கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில், தற்போது அழுகிய நிலையில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
07:25 AM (IST) Aug 02
பலுசிஸ்தானில் மூத்த அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் திடீரென மாயமாகியுள்ளது. வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயமான நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
07:24 AM (IST) Aug 02
கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் 2 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.