மழை வரப்போகுது... சீக்கிரமா உங்க அழுக்கு துணிகளை துவைச்சு காய வச்சிக்கோங்க….

Oct 28, 2017, 11:29 AM IST



திங்கள் கிழமையில் இருந்து சூரியணை நீங்கள் சந்திப்பது சந்தேகம்தான். ஆதலால், உங்கள் அழுக்கு துணிகளை இந்தவார இறுதிக்குள் துவைத்து, உலர்த்திக் கொள்ளுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் தமிழக மக்களுக்கு குறிப்பாக சென்னை வாசிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

சென்னையின் சில பகுதிகளில் குறிப்பாக மத்திய சென்னையில் அடுத்த 30 நிமிடங்களுக்கு நல்ல மழை எதிர்பார்க்க முடியும். திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை உண்டு. பிறகு தூத்துக்குடி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையை பொருத்தமட்டில் உண்மையான மழைக்காலம் 29ம் தேதி இரவு அல்லது 30ம் தேதி முதல் துவங்கம் அதுவரை அவ்வப்போது ஆங்காங்கே திடீர் மழையும், சிலநேரங்களிலும் சுளீர் வெயிலும் அடிக்கும். 

இந்த வார விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். ஆனால், திங்கள் கிழமையில் இருந்து சூரியணை நீங்கள் சந்திப்பது சந்தேகம்தான். ஆதலால், உங்கள் அழுக்கு துணிகளை இந்தவார இறுதிக்குள் துவைத்து, உலர்த்திக் கொள்ளுங்கள்