சிவகங்கை
சிவகங்கையில் கல்லூரிக்கு செல்ல வற்புறுத்தியதால் மாணவி மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே மார்நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜா மகள் பிரீத்தி (19). இவர் பூவந்தியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் திடிரென கல்லூரிக்குச் செல்ல பிடிக்கவில்லை என்று பிரீத்தி கூறியுள்ளார். ஆனால், குடும்பத்தினர் வற்புறுத்தி அவரை, கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த பிரீத்தி புதன்கிழமை மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாச்சேத்தி காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரணம் தெரியாமல் கல்லூரி மாணவி தீக்குளித்து இறந்த சம்பவ இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.