வாங்கிய பொருளுக்கு காசு கேட்ட கடைக்காரர்… கத்தியால் குத்திய வாடிக்கையாளர்…

By manimegalai aFirst Published Oct 18, 2021, 9:13 AM IST
Highlights

திருக்கழுக்குன்றம் அருகே வாங்கிய பொருளுக்கு காசு கேட்ட கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே வாங்கிய பொருளுக்கு காசு கேட்ட கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் கடை ஒன்றில் வேலை செய்பவர் சுரேஷ். இந்த கடைக்கு பொருட்கள் வாங்க 5 பேர் வந்துள்ளனர். அவர்கள் பொருட்கள் வாங்கும் சமயத்தில் கடையின் பெண் ஊழியரை கேலி செய்ததாக தெரிகிறது.

இது தவிர வாங்கிய பொருட்களுக்கு பணம் தராமல் வம்பு பண்ணியதாகவும் கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த சுரேஷ் உதவிக்காக அருகில் இருந்த கடைக்காரர்களை அழைத்துள்ளார்.

இதையறிந்த 5 பேரில் ஒருவர் சுரேஷை கத்தியால் கத்தி உள்ளார். அலறிக் கொண்டு அவர் கீழே விழ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட 5 பேரும் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டனர்.

காயம் அடைந்த சுரேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் 5 பேரில் 3 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். வாங்கிய பொருளுக்கு காசு கேட்ட கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!