போலீஸ்காரரை தாக்கிய 24 மணி நேரத்தில் ரௌடி ஆனந்தன் என்கவுண்ட்டர்…. கச்சிதமாய் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… நடந்தது என்ன?

First Published Jul 4, 2018, 6:46 AM IST
Highlights
police encounter rowday anandan in chennai police report


சென்னை ராயப் பேட்டையில் குடித்துவிட்டு ரகளை செய்து கொண்டிருந்தவர்களை தட்டிக் கேட்ட போலீஸ்காரர் ராஜவேலுவை 16 இடங்களில் கத்திய்ல் குத்திவிட்டு தப்பிய ஓடிய ரௌடி ஆனந்தன் என்பவரை 24 மணி நேரத்தில் தேடிப்பிடித்து சிட்டி போலீஸ் போட்டுத் தள்ளியது. இந்த என்கவுண்ட்டர் எப்படி நடந்தது என்பது குறித்து கூடுதல் கமிஷனர் சாரங்கன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் முதல்நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர்  ராஜவேலு நேற்று முன்தினம் நள்ளிரவில் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு போலீஸ் கட்டுப் பாட்டு அறையில் இருந்து ஒரு தகவல் அனுப்பப்பட்டது.

அதில் ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப்பகுதியில் சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்தி கலாட்டா செய்வதாகவும், அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜவேலு தனியாக மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு விரைந்து சென்றார். அங்கு மது அருந்தி ரகளையில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தார்.

தனியாக வந்த அவரை ரகளையில் ஈடுபட்டவர்கள் திடீரென்று தாக்கினார்கள். அவர்கள் கத்தியால் ராஜவேலுவின் தலையில் சரமாரியாக குத்தினார்கள். கற்களாலும் தாக்கினார்கள். ராஜவேலு உயிர்பிழைக்க அங்கிருந்து ரத்தம் சொட்ட தப்பி ஓடினார். அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறி ராஜவேலு தப்பிச்சென்றார்.

பின்னர் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு 16 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டிருந்தது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சென்னை போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

போலீசார் விடிய, விடிய தேடுதல் வேட்டை நடத்தி போலீஸ்காரர் ராஜவேலுவை கத்தியால் குத்திய 6 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பி.எம். தர்கா பகுதியை சேர்ந்த சிறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் அரவிந்தன், ஜிந்தா என்கிற உதயநிதி, அஜித்குமார், வேல்முருகன், சீனு, மகேஷ் என தெரிந்தது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். இவர்கனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களை போலீசார் அழைத்து வரும்போது, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி அருகே ரவுடி ஆனந்தன் அவருடன் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்தார்.

அப்போது ரவுடி ஆனந்தனை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆனந்தன் மார்பில் ஒரு குண்டு பாய்ந்து பலியானார்.  இந்த என்கவுண்ட்டர் சம்பவம் குறித்து கூடுதல் கமிஷனர் சாரங்கன் செய்தியாள்களிடம் பேசினார்.

போலீஸ்காரர் ராஜவேலு மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் அவர் வைத்திருந்த வாக்கிடாக்கி கருவியை பறித்துச் சென்றுவிட்டனர்.  அவர்களில் 6 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தப்ப் ஓடிய ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேரை தேடிவந்தோம். அவர்கள் சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இரவு 8 மணியளவில் ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேரும் சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

ரவுடி ஆனந்தனிடம், ‘ராஜவேலுவிடம் பறித்த வாக்கிடாக்கியை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்?’, என்று விசாரணை நடத்தப்பட்டது. தரமணி பாலிடெக்னிக் கல்லூரி அருகே புதர் பகுதியில் மறைத்து வைத்துள்ளதாக ஆனந்தன் கூறினார். இதனால் ஆனந்தனை மட்டும் ஜீப்பில் ஏற்றி தரமணி பகுதிக்கு தனிப்படை போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

தரமணி பகுதியில் வாக்கிடாக்கியை தேடி கண்டெடுத்தனர். வாக்கிடாக்கியோடு அரிவாள் ஒன்றும் இருந்தது. வாக்கிடாக்கியை ரவுடி ஆனந்தன் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவிடம் எடுத்து கொடுத்துள்ளார். அப்போது அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை வெட்டிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அப்போது உதவி கமிஷனர் ரவுடி ஆனந்தனை எச்சரித்தார். உதவி கமிஷனரையும் ரவுடி ஆனந்தன் தாக்க முற்பட்டு உள்ளார்.

இதனால் தற்காப்புக்காக ரவுடி ஆனந்தன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் குண்டு பாய்ந்து ஆனந்தன்  உயிரிழந்ததாக தெரிவித்தார்.  இந்த ரவுடி ஆனந்தன் மீது 5 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனந்தனுக்கு ரஷீதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

click me!