இதுவரை கண்டிராத புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை… வெலவெலக்கும் வாகன ஓட்டிகள்…

By manimegalai aFirst Published Oct 15, 2021, 7:26 AM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சமாக உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளை கலங்க வைத்துள்ளது.

சென்னை: பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சமாக உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளை கலங்க வைத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி நாள்தோறும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இன்றும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  பெட்ரோல் ஒரு லிட்டர் 30 காசுகள் உயர்ந்து இருக்கிறது. இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.40 காசுகளாகும்.

டீசல் விலையும் உச்சத்தில் உள்ளது. ஒரு லிட்டர் 33 காசுகள் அதிகரித்து ரூ.98.26 காசுகளாக இருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் 14வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்து.

தொடரும் விலை ஏற்றம் வாகன ஓட்டிகளை கலக்கத்தில் கொண்டு போய் விட்டுள்ளது. பல மாநிலங்களில் டீசல் விலை 100 ரூபாயை எட்டி உள்ள நிலையில் சென்னையிலும் அப்படிப்பட்ட நிலை விரைவில் எழும் சூழல் தற்போது ஏற்பட்டு உள்ளதாக வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

click me!