2016 டிசம்பர் 4-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போது தாம் சிகிச்சை அளித்ததாக மருத்துவர் ரமா, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் தினந்தோறும் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற 40 நிமிடம் போராடியதாக ரமா வாக்குமூலம் அளித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனை வார்டில் டிசம்பர் 4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது வார்டிலேயே ஜெயலலிதாவுக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் இதய அறுவைச் சிகிச்சை அளித்தபோது மருத்துவர் ரமா உடனிருந்தார்.
முன்னதாக ஜெயலலிதா 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் விசாரணை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.