Oct 18, 2018, 1:18 PM IST
இந்த உலகத்தில் பெற்ற தாயின் பாசத்தை மிஞ்சியது எதுவுமே இல்லை என்பது நிதர்சனமான உண்மை. ஒரு குழந்தை வயிற்றில் உருவான நாளில் இருந்து அந்த குழந்தைக்காகவே தன்னுடைய ஆசைகள் பல வற்றையும் தியாகம் செய்பவள் தாய்.
பத்து மாதம் சுமந்து பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாயின் ஆசை, அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் அவளை திருமண கோலத்தில் பார்த்து மகிழ வேண்டும் என்பது தான்.
இந்நிலையில் பெற்ற தாயும் உடல் நிலை சரியில்லாமல் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வந்த தாயின் ஆசையை நிரைவேற்ற, அவருடைய மகள் மருத்துவ மனையிலேயே தன்னுடைய உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு தாயின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். இந்த அவரச திருமணத்தில் குறிப்பிட்ட நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை கண்ணீரோடு வாழ்த்திய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.