ஐபிஎல் 2021 சாம்பியன் சிஎஸ்கே… கிடைத்த பரிசுத்தொகை எவ்வளவு…? மலைத்த ரசிகர்கள்

By manimegalai aFirst Published Oct 16, 2021, 8:40 AM IST
Highlights

ஐபிஎல் 2021 கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை அளிக்கப்பட்டு உள்ளது.

ஐபிஎல் 2021 கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை அளிக்கப்பட்டு உள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாவை சென்னை அணி துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. நேற்றைய வெற்றி மூலம் 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று காட்டி உள்ளது.

சிஎஸ்கே அணியின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள தோனி ரசிகர்கள், சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை அணியின் வெற்றியை பாராட்டி முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

4வது முறையாக சாம்பியன் கோப்பையை சிஎஸ்கே தட்டி சென்றுள்ளதால் ரசிகர்கள் ஏக கொண்டாட்டத்தில் உள்ளனர். இந் நிலையில் சிஎஸ்கே அணிக்கு கிடைத்துள்ள பரிசு தொகை எவ்வளவு என்ற விவரம் ரசிகர்களை வாவ் என்று சொல்ல வைத்துள்ளது.

சிஎஸ்கே அணிக்கு 20 கோடி ரூபாய்  பரிசுத்தொகை அளிக்கப்பட்டு உள்ளது. பரிசுத் தொகை விவரத்தை கண்டு ரசிகர்கள் மேலும் குஷியில் இருக்கின்றனர். போராடி தோல்வி கண்ட கொல்கத்தா அணிக்கு 12.50 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது.

 

click me!