
சென்னையின் இயற்கை அரணாகவும் உயிர்நாடியாகவும் திகழும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலப் பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி 'பசுமைத் தாயகம்' சார்பில் விழிப்புணர்வு இயக்கமும் கையெழுத்துப் இயக்கமும் நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். சென்னை வெள்ளத்தில் இருந்து தப்பிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்கவும் சதுப்பு நில எல்லைகளை உடனடியாக அரசு வரையறை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.