தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு அதிகாரிகள் விசாரணை

Published : Oct 04, 2023, 02:38 PM IST
தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு அதிகாரிகள் விசாரணை

சுருக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கோமிட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). தனியார் பேருந்து ஓட்டுநரான இவர் இன்று காலை பணிமுடித்து விட்டு ஆலங்காயம் பகுதியில் இருந்து தனியார் பேருந்தின் மூலம்  கோமிட்டியூருக்கு சென்றுள்ளார். அப்பொழுது  தனியார் பேருந்து கோமிட்டியூர் பேருந்து நிலையத்தில் நின்ற போது ரமேஷ் பேருந்தில் இருந்து இறங்க முயன்றள்ளார். 

கோவையில் வடமாநிலத்தவர் ஓட்டு வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்பொழுது ரமேஷ் எதிர்பாராவிதமாக நிலைத்தடுமாறி சாலையில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்காயம் காவல்துறையினர் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தனியார்  பேருந்து ஓட்டுநர் பேருந்தில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்து உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!