கோவை கார் குண்டு வெடிப்பு விவகாரம் - நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு.! மீண்டும் பரபரப்பு

By Raghupati RFirst Published Oct 26, 2022, 9:37 PM IST
Highlights

கோவை கார் வெடித்த கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவையில் கடந்த 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஜமேசா முபினின் கூட்டாளிகள் ஐந்து பேரை கைது செய்த தனிப்படை போலீசார் நேற்று சிறையிலடைத்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஐவரையும் காவல் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க..கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா

click me!