கோவையில் கார் வெடித்த விவகாரம்.. கைதான 5 பேருக்கும் நவ.8 வரை நீதிமன்றக் காவல்!!

Published : Oct 25, 2022, 11:32 PM IST
கோவையில் கார் வெடித்த விவகாரம்.. கைதான 5 பேருக்கும் நவ.8 வரை நீதிமன்றக் காவல்!!

சுருக்கம்

கோவையில் கார் வெடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் வரும் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவையில் கார் வெடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் வரும் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23ம் தேதி அதிகாலை 4 30 மணி அளவில்  காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்குகள்… திரும்பி அதே நாட்டிற்கு அனுப்பி வைத்த சுங்கத்துறை!!

இதுத்தொடர்பான வழக்கில் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் தகவல் அறிக்கையில் தற்போது உபா பிரிவு கூடுதலாக  சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுசதி, இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்துதல் ஆகிய 3  பிரிவுகளும் முதல் தகவல் அறிக்கையில் கூடுதலாக  சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதலீடுகள் பெற்று மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனருக்கு ஜாமின் மறுப்பு!!

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும்  ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள உள்ள  ஜே எம் 2 நீதிபதி செந்தில் ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்கள் 5 பேருக்கும் நவம்பர் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க 2 ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில் ராஜா உத்தரவிட்டார். முன்னதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் கோவை அரசு மருத்துவமையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு பேருந்தில் இளம்பெண்ணை மடியில் உட்கார வைத்து! கண்ட இடத்தில் கை வைத்து எல்லை மீறல்! தலையில் அடித்துக்கொண்ட பயணிகள்!
கோவை KG கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்தி குத்து.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்