
அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற பகுதியில் உலகக் கோப்பை செஸ் தொடர் நடந்து வருகிறது. கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரானது வரும் 24 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், குகேஷ், விதித் குஜராத்தி, ஆர் பிரக்ஞானந்தா, நிகால் சரின், சுனில்தத் லைனா நாராயணன் ஆகியோர் உள்பட மொத்தமாக 206 செஸ் பிளேயர்ஸ் இடம் பெற்றனர்.
Asia Cup 2023: ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு!
இந்த நிலையில், நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான ஆர் பிரக்ஞானந்தா, உலக தரவரிசைப் பட்டியலில் 3ஆவது நிலை வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேபியானோ கருவானாவை எதிர்கொண்டார். இதில், பிரக்ஞானந்தா ஒயிட் காயின்களுடன் விளையாடினார். 47ஆவது மூவின் போது போட்டியானது டிரா செய்யப்பட்டது.
Jailer: ரஜினியின் தீவிர ரசிகர்; அயர்லாந்தில் ஜெயிலர் படம் பார்த்த சஞ்சு சாம்சன்!
இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது. இதில், பிரக்ஞானந்தா 3.5-2.5 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் உலக தரவரிசைப் பட்டியலில் நம்பர் ஒன் வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்கிறார்.
50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.