Asian Games 2023: ஆப்பிரிக்க வம்சாவளி தடகள வீரர்களால் இந்தியாவின் பதக்கம் குறைந்ததா?

Published : Oct 05, 2023, 07:37 PM ISTUpdated : Oct 05, 2023, 07:52 PM IST
Asian Games 2023: ஆப்பிரிக்க வம்சாவளி தடகள வீரர்களால் இந்தியாவின் பதக்கம் குறைந்ததா?

சுருக்கம்

ஆப்பிரிக்க வம்சாவளி வீரர்களை சில நாடுகள் களமிறக்காமல் இருந்திருந்தால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்லே சுமரிவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஹாங்சோவில் நடந்து வரும் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரையில், 21 தங்கம், 32 வெள்ளி மற்றும் 33 வெண்கலத்துடன்      86 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்ட தடகள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை பதக்கத்தை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.

CWC:உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை; 4,658 ஒருநாள் போட்டிகளில் முதல் முறை; 11 வீரர்கள் இரட்டை இலக்க ரன்கள்!

இந்த நிலையில், இந்தியாவின் தடகள விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அதே வேளையில் சில நாடுகள் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை களமிறக்காமல் இருந்திருந்தால் இந்தியாவின் பதக்கம் எண்ணிக்கையானது மேலும், அதிகமாக இருந்திருக்கும் என்று இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவர் அடில்லே சுமாரிவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2023 உலகக் கோப்பையில் முதல் அரைசதம் அடித்த ஜோ ரூட்; ஹென்றி வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து 281 ரன்கள் குவிப்பு!

இது தொடர்பாக, ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் உடன் பேசிய உலக தடகள கவுன்சிலின் துணைத் தலைவர் அடில்லே சுமாரிவாலா கூறியிருப்பதாவது, தற்போது 26 வீரர்களை விட 41 இந்திய விளையாட்டு வீரர்கள் பதக்கங்களுடன் வீடு திரும்பியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார். "இந்தியாவில் இருந்து 65 தடகள வீரர்கள் பல்வேறு தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் 29 பேர் பதக்கங்களுடன் தாயகம் திரும்புகின்றனர்.

இதில் 6 தங்கம், 14 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் அடங்கும். குறைந்தபட்சம் 7 தங்கப் பதக்கங்கள் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை இழந்துள்ளோம். சில நாடுகளால் களமிறக்கப்பட்ட ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அத்தகைய விளையாட்டு வீரர்கள் களமிறங்காத சூழ்நிலையில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 தங்கம், 19 வெள்ளி மற்றும் 9 வெண்கலமாக உயர்ந்திருக்கும்.

பயிற்சிக்கான புதிய ஜெர்சியில் இந்திய அணி – ஜெர்சியிலும் காவியா? விமர்சனத்திற்கு உள்ளான நியூ ஜெர்சி!

ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்ற நாடுகளுக்கு ஓடுவது குறித்து AFI தலைவர் தனது கவலையை வெளிப்படுத்துவது இது முதல் முறை அல்ல. AFI தலைவர் இந்திய விளையாட்டு வீரர்களின் விளையாட்டுகளில் அவர்களின் சிறந்த செயல்பாட்டிற்காக பாராட்டினார். இந்திய தடகள வீரர்களின் சாதனைகளை விவரித்த சுமாரிவாலா:

England vs New Zealand: உலகக் கோப்பைக்கான டிராபியை தூக்கி வந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்!

"ஏழு தடகள வீரர்கள் தங்களது தனிப்பட்ட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர், ஐந்து வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சீசனின் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினர். மேலும், மூன்று தடகள வீரர்கள் புதிய தேசிய சாதனைகளைப் படைத்தனர், மேலும் இருவர் புதிய ஆசிய விளையாட்டு சாதனைகளைப் படைத்தனர்."

 

ENG vs NZ: 2023 உலகக் கோப்பை – முதல் சிக்ஸர் அடித்து ரன் கணக்கை தொடங்கிய ஜானி பேர்ஸ்டோவ்!

 

சீன அதிகாரிகள் வேண்டுமென்றே இந்திய விளையாட்டு வீரர்களைக் குறிவைப்பதாக இந்திய தடகள சம்மேளனத்தின் (ஏஎஃப்ஐ) மூத்த துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ், குற்றம் சாட்டியுள்ளார். சீன அதிகாரிகளின் மோசமான நடவடிக்கைகளால் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு சீனாவில் வெற்றியை அடைவது சவாலாக இருப்பதாக வலியுறுத்தினார். ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியின் போது, ​​தடகள வீரர்களான நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் ஜெனா மற்றும் அன்னு ராணி ஆகியோர் பங்கேற்ற மோசமான நடுவர் சம்பவங்களைத் தொடர்ந்து இது போன்று பாபி ஜார்ஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது ஒரு தனிச் சம்பவம் அல்ல. ஜோதி உட்பட எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு முன்பு இது நடந்தது. ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணியிடம் நடந்தது. அது ஜெனா மற்றும் நீரஜ் உடன் நடந்தது. இது வேண்டுமென்றே நடந்து கொண்டே இருப்பதாக தெரிகிறது, மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுபோன்ற சம்பவங்களைக் கண்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்" என்று கூறினார்.

சீன அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். "அதிகாரிகளுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். போட்டி முடிவடைந்தாலும், நீரஜ், ஜெனா, அன்னு ராணி ஆகியோருக்கு தங்கம் மற்றும் வெள்ளியைப் பெற்றுத் தந்தோம். இருப்பினும், சீனாவில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் பதக்கம் வெல்வதற்கான சவால்களை எதிர்பார்த்தோம். அவர்கள் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?