அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா!

Published : Jan 06, 2023, 12:47 PM IST
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா!

சுருக்கம்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா கால் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று போட்டியில் பெலாரஸ் வீராங்கனையான விக்டோரியா அசரென்கா, சீனாவின் கின்வென் செங்கை 6-2, 7-5 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

IND vs SL: காட்டடி அடித்து கடைசி வரை கடுமையாக போராடிய அக்ஸர் படேல்..! பரபரப்பான 2வது டி20யில் இலங்கை வெற்றி

இதே போன்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் ருமேனியாவின் இரின் கெமிலியா பெகு பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியன் ஆஸ்டாபென்கோவை 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதே போன்றூ நடந்த மற்ற போட்டிகளில் ஆன்ஸ் ஜாபியர், லின்டா நோஸ்கோவா வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

Also Read This: டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த கேப்டன்களில் ரோகித் சர்மா நம்பர்!

இதே போன்று கால் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 5 வீராங்கனையான அரினா சபலென்கா, செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த மார்கெட்டா வோண்ட்ரோசோவாவை 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சபலென்கா 38 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். மார்கெட்டா 17 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளார். 

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20: இந்தியா செய்த மிஸ்டேக்ஸ் என்னென்ன தெரியுமா?

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?