Paris 2024 Olympics: வில்வித்தையில் தீபிகா குமாரி அசத்தல் – 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!

Published : Jul 31, 2024, 07:09 PM IST
Paris 2024 Olympics: வில்வித்தையில் தீபிகா குமாரி அசத்தல் – 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!

சுருக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் இன்று நடந்த மகளிர் வில்வித்தை போட்டியில் 32ஆவது சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெற்றி பெற்று 16ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்களை வென்றது. மகளிருக்கான தனிநபர் பிரிவில் 10மீர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

Paris 2024: 50மீ ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரராக ஸ்வப்னில் குசலே சாதனை!

இந்த நிலையில் தான் 5ஆவது நாளான இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் 64ஆவது சுற்று போட்டியில் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த பர்னத் ரீனா என்பவரை எதிர்கொண்டார். இதில் 6-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 32ஆவது சுற்றுக்கு முன்னேறினார். இதில், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த குயிண்டி ரோயெஃப்பனை எதிர்கொண்டார். இதில், 6-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 16ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

Paris 2024 Medal Table: 26 பதக்கங்கள் கைப்பற்றினாலும் அமெரிக்காவிற்கு 6ஆவது இடம்; இந்தியாவிற்கு 33ஆவது இடம்!

இதில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் க்ரோப்பனை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இதே போன்று இன்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் 16ஆவது சுற்றில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்ஹகைன், நார்வே நாட்டைச் சேர்ந்த சன்னிவா ஹாப்ஸ்டாட்டை எதிர்கொண்டார். இதில், 5-0 என்ற கணக்கில் லோவ்லினா போர்ஹகைன் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு குரூப் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற பிவி சிந்து 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!