
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்களை வென்றது. மகளிருக்கான தனிநபர் பிரிவில் 10மீர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்த நிலையில் தான் 5ஆவது நாளான இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் 64ஆவது சுற்று போட்டியில் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த பர்னத் ரீனா என்பவரை எதிர்கொண்டார். இதில் 6-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 32ஆவது சுற்றுக்கு முன்னேறினார். இதில், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த குயிண்டி ரோயெஃப்பனை எதிர்கொண்டார். இதில், 6-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 16ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் க்ரோப்பனை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இதே போன்று இன்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் 16ஆவது சுற்றில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்ஹகைன், நார்வே நாட்டைச் சேர்ந்த சன்னிவா ஹாப்ஸ்டாட்டை எதிர்கொண்டார். இதில், 5-0 என்ற கணக்கில் லோவ்லினா போர்ஹகைன் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.