World Cup 2023: மனைவி கர்ப்பம்? மும்பை திரும்பிய விராட் கோலி – வார்ம் அப் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை!

Published : Oct 02, 2023, 03:28 PM IST
World Cup 2023: மனைவி கர்ப்பம்? மும்பை திரும்பிய விராட் கோலி – வார்ம் அப் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை!

சுருக்கம்

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி கவுகாத்தியிலிருந்து திருவனந்தபுரம் செல்லாமல் அவர் மும்பைக்கு திரும்பியுள்ளார்.

கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக 10 அணிகளும் தலா 2 வார்ம் அப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது வார்ம் அப் போட்டியானது 30 ஆம் தேதி கவுகாத்தி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால், டாஸ் மட்டுமே போடப்பட்ட நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியானது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 9ஆவது வார்ம் அப் போட்டியானது நாளை திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

World Cup 2023: உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்ல எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்?

இதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று கவுகாத்தியிலிருந்து திருவனந்தபுரம் வந்தனர். ஆனால், விராட் கோலி மட்டும் திருவனந்தபுரம் வரவில்லை. மாறாக, அவர் கவுகாத்தியிலிருந்து அவரச அவசரமாக மும்பைக்கு திரும்பியுள்ளார். என்ன காரணம், எதற்காக அவர் மும்பை திரும்பினார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்பு விராட் கோலியின் மனைவி 2ஆவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும், விராட் கோலி 2ஆவது முறையாக அப்பாவாக போவதாகவும் தகவல் வெளியானது.

ODI World Cup 2023: கிரிக்கெட் வர்ணனையாளர்களான 8 இந்திய உலகக் கோப்பை வின்னர்ஸ், 7 முன்னாள் கேப்டன்கள்!

ஒரு வேளை இது உண்மையாக இருந்து, தனது மனைவியை பார்ப்பதற்காகத்தான் விராட் கோலி மும்பை சென்றிருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. எனினும், அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பது குறித்து முறையான அறிவிப்பு வெளிவரவில்லை. விராட் கோலி மும்பை சென்றுள்ள நிலையில், நாளை நடக்க உள்ள நெதர்லாந்து அணிக்கு எதிரான 9 ஆவது வார்ம் அப் போட்டியில் இடம் பெறப்போவதில்லை என்று கூறப்படுகிறது.

World Cup Opening Ceremony: கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழாவில் யாருக்கெல்லாம் அனுமதி?

வரும் 5 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் முதல் போட்டியானது அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. அதோடு, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியானது 8 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

CWC 2023:ஆரோன் பிஞ்ச் தவிர சீனியர் வீரர்களின் கணிப்பில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு வாய்ப்பு

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?