அதியா ஷெட்டி திருமணத்திற்கு வந்த மீடியா நண்பர்களுக்கு இனிப்பு வழங்கிய சுனில் ஷெட்டி மற்றும் ஆஹான் ஷெட்டி!

Published : Jan 23, 2023, 07:47 PM ISTUpdated : Jan 23, 2023, 07:49 PM IST
அதியா ஷெட்டி திருமணத்திற்கு வந்த மீடியா நண்பர்களுக்கு இனிப்பு வழங்கிய சுனில் ஷெட்டி மற்றும் ஆஹான் ஷெட்டி!

சுருக்கம்

தனது மகள் அதியா ஷெட்டியின் திருமணத்திற்கு வந்திருந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நடிகர் சுனில் ஷெட்டி இனிப்பு வழங்கியுள்ளார்.  

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் நடிகை அதியா ஷெட்டி இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலிக்கும் போது பல இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து சுற்றி வந்துள்ளனர். இவ்வளவு ஏன், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை துபாயில் வைத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவே இன்று கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

மாஸாக நடந்த கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமண நிகழ்ச்சியிக்கு யாரெல்லாம் வந்திருந்து வாழ்த்தினார்கள் தெரியுமா?

மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் விருந்தினர் மாளிகையில் வைத்து நடந்த கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். தனது மகளுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், சுனில் ஷெட்டி அதிகாரப்பூர்வமாக இன்று நான் மாமனார் ஆகிவிட்டேன் என்று கூறி மகிழ்ந்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!

கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமண நிகழ்ச்சிக்கு கிருஷ்ணா ஷெராஃப், டயானா பென்டி, அனுஷ்கா ரஞ்சனா மற்றும் அவரது கணவர் ஆதித்யா சீல் மற்றும் அன்சுல் கபூர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இஷாந்த் சர்மா மற்றும் வருண் ஆரோன் ஆகிய கிரிக்கெட் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு முன்னதாக கேஎல் ராகுல் வீடு வண்ண விளங்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!

ஆண்டுதோறும் நடந்து வரும் ஐபிஎல் சீசனில் 16ஆவது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பண்ட் திரும்ப வருவது முக்கியம்: மகாகாலேஸ்வரர் கோயிலில் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்த இந்திய வீரர்கள்

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!