IPL 2023: ரோகித்துக்கு ஓபனிங்கலாம் செட்டே ஆகாது, மிடில் ஆர்டர் தான் - அனில் கும்ப்ளே அட்வைஸ்!

Published : Apr 03, 2023, 04:59 PM ISTUpdated : Apr 03, 2023, 05:01 PM IST
IPL 2023: ரோகித்துக்கு ஓபனிங்கலாம் செட்டே ஆகாது, மிடில் ஆர்டர் தான் - அனில் கும்ப்ளே அட்வைஸ்!

சுருக்கம்

ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தால் மட்டுமே அவரால் சிறப்பாக விளையாட முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல் 2023 தொடரின் 16 ஆவது சீசன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் அந்தந்த அணிகளே தற்போது வரையிலும் வெற்றி வாகை சூடியுள்ளன. ஆனால், ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. நேற்று பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

IPL 2023: ஒரே மேட்ச் தான், யாருன்னு காட்டிய லக்னோ; பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஓபனிங் ஆடி வரும் ரோகித் சர்மா சொதப்பி வரும் நிலையில், அவர் ஓபனிங் இறங்குவதற்குப் பதிலாக மிடில் ஆர்டரில் இறங்கி பேட்டிங் ஆட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். மும்பை அணியில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேமரூன் க்ரீன், நேகல் வதேரா என்று நட்சத்திர வீரர்கள் இருக்கும் நிலையில், ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் இறங்கினால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலமாக இருக்கும். 

IPL 2023: கவுதம், மார்க் வுட், கைல் மேயர்ஸ் வைத்து திட்டம் போடும் லக்னோ; சேப்பாக்கத்தில் ஆக்‌ஷன் காட்சி தான்

ஏனென்றால், மிடில் ஆர்டரில் அனுபவம் இல்லாத வீரர்கள் இருக்கும் நிலையில், அனுபவம் வாய்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேஎன்கள் தேவை. ஆனால், கண்டிப்பாக ரோகித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் மிடில் ஆர்டரில் இறங்கி விளையாட வேண்டும் அப்படி செய்வதன் மூலமாக 7 முதல் 15 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியால் நல்ல ஸ்கோரை எட்ட முடியும் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

IPL 2023: 1426 நாட்களுக்குப் பிறகு சென்னை திருவிழா: ரெய்னா இல்லாமல் சேப்பாக்கத்தில் களம் காணும் சிஎஸ்கே!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?