வங்கதேசத்திற்கு ஆப்பு வச்சு 9ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற இந்திய மகளிர் அணி!

Published : Jul 26, 2024, 05:18 PM IST
வங்கதேசத்திற்கு ஆப்பு வச்சு 9ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற இந்திய மகளிர் அணி!

சுருக்கம்

மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சோமா அக்தர் 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

படகில் அணிவகுப்பு நிகழ்ச்சி – ஒலிம்பிக் ஸ்டேடியத்திற்கு வெளியில் தொடக்க விழா – எப்படி நேரலையில் பார்ப்பது?

பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய மகளிர் அணியில் ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பூஜா வஸ்த்ரேகர் மற்றும் தீப்தி சர்மா இருவரும் தலா ஒரு விக்கெட் எடுத்தார். பின்னர் 81 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர்.

Paris Olympics 2024 – நாளை ஜூலை 27, இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன? முதல் பதக்கம் வெல்லுமா?

இறுதியாக 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்திய மகளிர் அணி 83 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. ஷஃபாலி வர்மா 26 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 55 ரன்களும் எடுத்தனர். வரும் 28ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 2ஆவது அரையிறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharath Kamal: ஒலிம்பிக்கில் சிந்துவுடன் தேசிய கொடியை ஏந்தி செல்லும் தமிழன்; யார் இந்த சரத் கமல்?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!