8ஆர்டிஎம், 5 வருட மெகா ஏலம், 4-6 வீரர்களை தக்க வைக்க அனுமதி கேட்கும் ஐபிஎல் உரிமையாளர்கள்!

Published : Jul 24, 2024, 08:15 PM IST
8ஆர்டிஎம், 5 வருட மெகா ஏலம், 4-6 வீரர்களை தக்க வைக்க அனுமதி கேட்கும் ஐபிஎல் உரிமையாளர்கள்!

சுருக்கம்

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள நிலையில் பிசிசிஐ அதிகாரிகளுடன் 10 அணிகளின் உரிமையாளர்கள் கலந்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.

ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக வரும் 30 அல்லது 31 ஆம் தேதிகளில் பிசிசிஐ மற்றும் 10 அணிகளின் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக அணி உரிமையாளர்களுக்கு என்ன வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுள்ளது.

Womens Asia Cup 2024 Prize Money: மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடருக்கான பரிசுத் தொகை எவ்வளவு?

அதில், ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்? சம்பளம், ஆர்டிஎம் கார்டு வசது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், தற்போது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்தப்படும் நிலையில் அதனை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று உரிமையாளர்கள் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

Corona, Paris 2024: பாரிஸீல் தலைதூக்கும் கொரோனா - மகளிர் வாட்டர் போலோ டீம் கொண்ட 5 பேருக்கு கொரோனா உறுதி!

வீரர்களின் சம்பளத்தை அணி உரிமையாளர்கள் நிர்ணயிக்க அதிகாரம் வழங்க வேண்டும். மேலும், வருடத்திற்கு ஒரு முறை சம்பளத்தை மாற்றி அமைக்க அதிகாரம் வழங்க வேண்டும். குறைந்தது 4 முதல் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு அணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். சில அணிகள் எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ளாமல், 8 ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்த ஐபிஎல் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவாதங்களை மேற்கொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா:பிரம்மாண்ட உடையில் சென்ற நீதா அம்பானி – முத்தம் கொடுத்து வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?