பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் அதிரடியால் இங்கிலாந்து 337 ரன்கள் குவிப்பு!

Published : Nov 11, 2023, 06:19 PM IST
பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் அதிரடியால் இங்கிலாந்து 337 ரன்கள் குவிப்பு!

சுருக்கம்

பாகிஸ்தானிற்கு எதிரான உலகக் கோப்பையின் 44ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பையின் 44ஆவது லீக் போட்டி புனே மைதானத்தில் நடக்கிறது. இதில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஒரு மில்லியன் ரசிகர்கள்: அதிக ரசிகர்கள் வருகை என்ற சாதனையை நோக்கி 2023 உலகக் கோப்பை!

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 82 ரன்கள் குவித்தது. மலான் 31 ரன்கள் எடுத்து இப்திகார் அகமது பந்தில் முகமது ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் அடித்த நிலையில், 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று ஜோ ரூட்டும் அரைசதம் அடித்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ENG vs PAK: இங்கிலாந்து 300 எடுத்தால் பாகிஸ்தான் 6.1 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும் – இங்கிலாந்து பேட்டிங்!

கடந்த போட்டியில் சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ் இந்தப் போட்டியில் 84 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதில், 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பிறகு வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 27 ரனகள் எடுத்த நிலையில், ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ஹாரி ப்ரூக் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசியா கிறிஸ் வோக்ஸ் 4 ரன்களில் வெளியேற, டேவிட் வில்லி 15 ரன்கள் சேர்க்கவே இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் குவித்தது.

வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு – ஸ்கோர்போர்டில் காட்டப்பட்ட 11.11.11, 11.11. 111 ரன்கள் தேவை!

பவுலிங்கைப் பொறுத்த வரையில் பாகிஸ்தான் அணியில் ஹரீஷ் ராஃப் 3 விக்கெட்டுகளும், ஷாகீன் அஃப்ரிடி மற்றும் முகமது வசீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இப்திகார் அகமது ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பிற்குள் செல்ல 6.4 ஓவர்களில் 337 ரன்களை சேஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்த தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேறும் நிலை ஏற்படும். மேலும், பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் சேஸ் செய்யாவிட்டால் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயில் நடந்த முதல் ஆசிய அரை மராத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முதலிடம் பிடித்து சாதனை!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..