T20 WC: இந்தியாவை ஊதித்தள்ளிய பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ்! 10 விக்கெட்டில் வென்று ஃபைனலுக்கு முன்னேறிய இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Nov 10, 2022, 4:44 PM IST
Highlights

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 169 ரன்கள் என்ற இலக்கை விக்கெட்டே இழக்காமல் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.
 

டி20 உலக கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது அரையிறுதி போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் காயத்தால் விலகிய டேவிட் மலானுக்கு பதிலாக ஃபிலிப் சால்ட் ஆடினார். ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட்டுக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான் ஆடினார்.

ஐபிஎல் 2023: கொச்சியில் ஐபிஎல் ஏலம்..! கூடுதல் தொகையால் குதூகலத்தில் ஐபிஎல் அணிகள்

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர், கேப்டன்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 28 பந்தில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். சூர்யகுமார் யாதவும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் இந்த உலக கோப்பையில் நல்ல ஃபார்மில் சிறப்பாக ஆடிய கோலி, இந்த போட்டியிலும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 40 பந்தில் 50 ரன்களுக்கு கோலி ஆட்டமிழந்தார். 

கோலியுடன் இணைந்து அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா, கோலி ஆட்டமிழந்த பின்னரும் டெத் ஓவரில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். கிறிஸ் ஜோர்டான் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்களும், கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் பவுண்டரியும் அடித்தார் பாண்டியா. சாம் கரன் வீசிய 19வது ஓவரிலும் அடித்து ஆடினார். அதிரடியாக ஆடிய் அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா, 33 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது இந்திய அணி.

சானியா மிர்சாவை ஏமாற்றிய ஷோயப் மாலிக்.. அதிகாரப்பூர்வமாக விவாகரத்து..?

169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் அபாரமாக பேட்டிங் ஆடினர். இந்திய பவுலர்கள் படுமோசமாக பந்துவீச, இந்திய பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து நொறுக்கிய பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் இருவருமே அரைசதம் அடித்தனர். பட்லர் 49 பந்தில் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்தில் 86 ரன்களும் அடிக்க, 16 ஓவரில் இலக்கை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறியது. வரும் 13ம் தேதி நடக்கும் ஃபைனலில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

click me!