ரூ.500 கோடி தரும் பிசிசிஐ; மாஸ் மைதானமாக மாறும் சென்னை சேப்பாக்கம்!

Published : Jun 30, 2023, 04:49 PM IST
ரூ.500 கோடி தரும் பிசிசிஐ; மாஸ் மைதானமாக மாறும் சென்னை சேப்பாக்கம்!

சுருக்கம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கும் மைதானங்களில் உள்ள வசதியை மேம்படுத்துவதற்காக பிசிசிஐ ஒவ்வொரு மைதானத்திற்கும் ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளது.

இந்தியா நடத்தும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த உலகக் கோப்பை தொடரானது, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, லக்னோ, ஹைதராபாத், புனே, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய 10 மைதானங்களில் போட்டி நடக்கிறது.

ஸ்டிக் ஊன்றி நடக்கும் நாதன் லயான்; இன்று விளையாட வாய்ப்பில்லை; ஆஸிக்கு பின்னடைவு!

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்காக மைதானங்களில் உள்ள வசதியை மேம்படுத்துவதற்காக பிசிசிஐ ரூ.500 கோடி ஒதுக்கி உள்ளது. அதன்படி ஒவ்வொரு மைதானத்திற்கும் ரூ.50 கோடி வழங்கப்படுகிறது. தற்போது தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. இதே போன்று தர்மசாலா மைதானத்திலும் புதிய அவுட்பீல்டு செய்யபட்டது. தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள மின் விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செம்மண் கலந்த ஆடுகளம் உருவாக்கப்பட உள்ளது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023: 8ஆவது முறையாக இந்தியா சாம்ப்யன் - 9 சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் இந்தியா 8 வின்

மேலும், ஒவ்வொரு மைதானத்திலும் அடிப்படை வசதிகள் முதல் மேற்கூரை, விளையாடும் மைதானங்களிலும் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. டெல்லி, லக்னோ, புனே ஆகிய மைதானங்கள் ஏற்கனவே பல விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது பிசிசிஐ வழங்கும் ரூ.50 கோடி மூலமாக ஒவ்வொரு மைதானத்திலும் பல மாற்ற்றங்கள் செய்யப்பட உள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி 2023: இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டன், விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளர்?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?