இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 19.05.2023

Published : May 19, 2023, 07:45 AM IST
இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 19.05.2023

சுருக்கம்

இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 19.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.

பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வு மதிப்பெண்களை எங்கு பார்ப்பது, எப்படி டவுண்லோடு செய்வது...முழு தகவல் இங்கே!

தேர்வு முடிவுகள்...

நேற்றைய முக்கிய செய்திகள்: Yesterday Top News 18.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.

நேற்றைய முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் காமராஜ் எடப்பாடிக்கு ஆதரவாக கூட்டம் போட்டுள்ளார். அவர் அவரது சொந்த ஊரான மன்னார்குடி தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெற சொல்லுங்கள். டெபாசிட் கூட மன்னார்குடி தொகுதியில் வாங்க முடியாது.

வைத்திலிங்கம் விளாசல்

வெங்கட் பிரபு இயக்கத்தில், தெலுங்கு நடிகர்நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படம் 6 நாட்களில் மிக மோசமான வசூலையே பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

திராவிட மாடல் அரசு என்பது பாட்டாளி மக்களுக்கான அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவையின் 25வது பொதுக்குழு மற்றும் பொன்விழா மாநாடு நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஸ்டாலின் உரை....

கோவை ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து மாயமான சிறுமி பொள்ளாச்சியில் மீட்கப்பட்டுள்ளார். அதிரடியாக செயல்பட்ட காவல்துறை 6 தனிப்படைகள் அமைத்து குழந்தையை மீட்ட காவல்துறை...

குழந்தை மீட்பு

கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்ற அரசு, ஆற்றில் உயிரிழந்தவர்களுக்கு பொறுப்பேற்காதது ஏன்? என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாராயணன் திருப்பதி கேள்வி!!

சென்ட்ரல் விஸ்டா என்ப்படும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைத் பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

புதிய நாடாளுமன்றம்...

தலித் சமூகத்தினர் புதிய காங்கிரஸ் அரசு மீது அதிக எதிர்பார்ப்பு கொண்டிருக்கிறார்கள் என்றும் தலித் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்காவிட்டால் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் ஜி. பரமேஸ்வரா எச்சரித்துள்ளார்.

ஜி பரமேஸ்வரா எச்சரிக்கை...

கேரளாவில் குழந்தை வேண்டும் என்று கேட்டு நச்சரித்த கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற நபர் தாமாக முன்வந்து காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

கள்ளக்காதல்...

கள்ளச்சாராய உயிரிழப்புகளையும் அதனை தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசையும் கண்டித்து, தமிழகம் முழுவதும் வரும் 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.

அண்ணாமலை அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து மதுபான விற்பனைக் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்த வேண்டும் என்று ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

புதுவையில் கள்ளச்சாராயம்...

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளான வரும் 21 ஆம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வர உள்ள நிலையில் அதே நாளில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.

தமிழகம் வரும் ராகுல்காந்தி

மத்திய சட்டத்துறை மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகல், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராகப் மாற்றப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்

காங்கிரஸ் கட்சிக்காகப் போராடும் வலிமையான சக்தியாகக் கருதப்படும் டி.கே. சிவக்குமார் புதிதாகப் பொறுப்பேற்கும் காங்கிரஸ் அரசில் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

Who is DK Shivakumar?

ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது ; நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அன்புணி கோரிக்கை...

ஜல்லிக்கட்டு ஒரு கலாசாரம் சார்ந்த நிகழ்வு என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் ஜல்லிக்கபட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து திருச்சியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நீதிமன்ற தீர்ப்பை வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஜல்லிக்கட்டு தீர்ப்பு...

கர்நாடக முதலமைச்சராக சித்தாரமையா நாளை மறு தினம் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பதவியேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா செல்லும் மு.க. ஸ்டாலின்

PREV
click me!

Recommended Stories

ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!