55 வயதாகும் பாஜக மூத்த தலைவர் 25 வயது இளைஞருடன் ஓரினச்சேர்க்கை...!

By vinoth kumarFirst Published Jul 14, 2019, 12:22 PM IST
Highlights

மத்திய பிரதேசத்தில் 55 வயதாகும் பாஜக தலைவர் பிரதீப் ஜோஷி 25 வயது இளைஞருடன் ஓரினச்சேர்க்கை உறவுக்கு முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் கட்சியின் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

மத்திய பிரதேசத்தில் 55 வயதாகும் பாஜக தலைவர் பிரதீப் ஜோஷி 25 வயது இளைஞருடன் ஓரினச்சேர்க்கை உறவுக்கு முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் கட்சியின் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜையின் நகர்புற பாஜக செயலாளராக பிரதீப் ஜோஷி பதவி வகித்து வருகிறார். அவர் தனது கட்சியன் இளம் தொண்டரான இந்தூரை சேர்ந்த 25 வயது இளைஞருடன் தகாத முறையில் ஈடுபட்டு குறுஞ்செய்தி அனுப்பிதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சாட்டிங் விவரங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இது குறித்து மத்தியபிரதேச காங்கிரஸ் செயலர் ராகேஷ் சிங் யாதவ் செய்தியாளர்களிடம், “ஒரு வாலிபருக்கு  பிரதீப் ஜோஷி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். கடந்த 20 நாட்களாக இவ்வாறு தவறான குறும் செய்திகளை ஜோஷி அனுப்பி வருகிறார். ஆனால், தனது செயல் வெளியில் தெரியக்கூடாது என அவர் முயற்சிகள் எடுத்து வருகிறார். 

இந்த வாலிபர் திடீரென காணாமல் போனதால் அவருக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்னும் பயம் தோன்றுகிறது. எங்களுக்கு தெரிந்தவரை அந்த வாலிபர் ஜோஷியை பற்றி வெளியில் சொல்ல முடிவு செய்து இந்த செய்திகளை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு அவர் காணாமல் போய் உள்ளதாக கூறப்படுகிறது.   அந்த இளைஞர் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுவதால் உஜ்ஜையினி காவல்துறை உடனடியாக அவரை கண்டு பிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் உமேஷ் சர்மா காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை அரசியல் நோக்கம் கொண்டது என குற்றம்சாட்டியுள்ளார். 

click me!