பெண் மத்திய அமைச்சருக்கு பாலியல் தொந்தரவு!

First Published Jun 13, 2018, 11:30 AM IST
Highlights
Sexual harassment - 3 arrested


மத்திய இணை அமைச்சரான அனுபிரியா பட்டேலுக்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று இளைஞர்களை உத்தரபிரதேச போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சரான அனுப்பிரியா பட்டேன், தனது சொந்த தொகுதியான மிர்சாபூரில் சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு காரில் வாரணாசிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அமைச்சர் அனுப்பிரியா படேலின் காரை, 3 இளைஞர்கள் தங்கள் காரில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். வேகமாக வந்த அவர்கள், மத்திய அமைச்சரின் காரை முந்திச் சென்று வழி மறித்தனர்.

இதனைப் பார்த்த அமைச்சரின் பாதுகாவலர்கள், அந்த இளைஞர்களை எச்சரிக்கை செய்தனர். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து அமைச்சர் அனுப்பிரியா பட்டேலை கிண்டல் செய்து வந்துள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளைக் கொண்டு பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை பாதுகாவலர்கள் எச்சரிக்கை செய்தனர்.

ஆனாலும், அவர்கள் அந்த இடத்தை விட்டுப்போகாமல் தொடர்ந்து அனுப்பிரியாவை கிண்டல் செய்து வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து அந்த இளைஞர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் யார் என்ற விபரம் குறித்து அவர்களிடம் வாரணாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண், மத்திய இணை அமைச்சர் ஒருவருக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ளதாகவும், சாதாரண பெண்களுக்கு எந்த அளவுக்கு இந்த மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்கும் என்று எதிர்கட்சிகள் மற்றும் பெண்கள் நல அமைப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.

click me!