மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 20-ம் தேதி மக்களவையில் விவாதம் என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிறகு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நம்பிக்கையில்லா தீர்மானம் மீது சபாநாயகர் முடிவு எடுக்கவில்லை . இந்நிலையில் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீது 20-ம் தேதி மக்களவையில் விவாதம் என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிறகு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.