காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஜூலை 2-ம் தேதி காவிரி ஆணையத்தில் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, அமைச்சர்கள், நீர்வளத்துறை சார்ந்த அதிகாரிகள், கர்நாடக மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.