தந்தையே மகளை பலாத்காரம் செய்த கொடூரம்.! தப்பி ஓடி தலைமறைவு..!

First Published Apr 19, 2018, 12:37 PM IST
Highlights
father rapedhis daughter in up


பெற்ற மகளை தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர காம வெறியனை போலீசார் தேடி  வருகின்றனர்

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கம்லாபூரை வசித்து வரும்  இளம்பெண் அவரது  தந்தையுடன் திருவிழாவிற்கு சென்று உள்ளார்

33 வயதான பெண்ணிற்கு தந்தையான இவர், திருவிழா முடிந்த உடன், தனது நண்பர் மான் சிங் என்பவருக்கு போன் செய்து வரவழைத்து  உள்ளார்.

மான் சிங் வந்தவுடன்,அவரது இருசக்கர வாகனத்தில் தனது மகளுடன் சேர்ந்து மூன்று பேரும் ஒரே பைக்கில், மற்றொரு  நண்பர் மீராஜின்    என்பவரது வீட்டிற்கு சென்று உள்ளார்

18  மணி நேர பலாத்காரம்

பின்னர் தன் மகள் என்றும் பாராமல்,தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கூட்டாக 18  மணி நேரமாக தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து உள்ளனர்

இந்த சம்பவம் ஏப்ரல் 15 ஆம் தேதி இரவு முதல்16 ஆம் தேதி அதிகாலை வரை பெரும் சிரமத்திற்கு ஆளான அந்த பெண் எப்படியோ அங்கிருந்து தப்பித்து வந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க, மீராஜை கைது செய்தனர்

ஆனால், அவருடைய தந்தை மற்றும் மற்றொரு நண்பரும் எஸ்கேப் ஆகி உள்ளனர். இவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி  வருகின்றனர்

இதற்கு முன்னதாக, அந்த பெண்ணுக்கும் தந்தைக்குமே தவறான உறவு இருப்பதாக கூறி ஏற்கனவே தந்தையை ஊரை விட்டு ஒதுக்கி    வைத்ததாக அந்த ஊர் பஞ்சாயத்தாரார் தெரிவித்து உள்ளார்

இது குறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே  தந்தையை கைது செய்துள்ளது போலீசார். பின்னர் பிப்ரவரை மாதம்  ஜாமீனில் வெளிவந்து உள்ளார். இதற்கு இடையே தனது 14  வயது  மகனுடன் வேறு வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ள இந்த பெண்மணி தனது தந்தையை பார்க்க திருவிழா தினத்தன்று அவரது வீட்டிற்கு  சென்று உள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                  

click me!