இளம்பெண்ணை நிர்வாண மாக்கி பல கோணங்களில் போட்டோ... பர்சனல் பாகங்களை தொட்டு செக்ஸ் சில்மிஷம்! ஓலா டாக்சி டிரைவரின் காம வெறியாட்டம்...

First Published Jun 5, 2018, 6:07 PM IST
Highlights
Bengaluru Ola Driver Allegedly Molests Passenger Forces Her To Strip For Photos


தனியாக பயணித்த பெண் பயணியை 'ஓலா' கால் டாக்சி டிரைவர் தாக்கி உடைகளை கலைந்து நிர்வாணமாக்கி போட்டோ பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் கோடிஹள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஆர்கிடெக்காக வேலை பார்த்து வருகிறார். மும்பை செல்வதற்காக, ஜூன் 1ம் தேதி அதிகாலை 2 மணியளவில் தனது வீட்டில் இருந்து ஏர்போர்ட்டுக்கு செல்வதற்காக ஓலா நிறுவனத்தின் வாயிலாக கார் புக் செய்தார். அருண் என்ற டிரைவர் காருடன் வீட்டில் இருந்து பெண்ணை பிக் அப் செய்தார். ஜீவன் பீமா நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் டோல்கேட் செல்லாமல் வேறு வழியில் காரை திருப்பியுள்ளார் ஓலா டிரைவர். 

இதுகுறித்து, எதற்காக வேறுவழியில் செல்கிறீர்கள் என அந்த பெண் கேட்டபோது, டோல் கேட் வழியாக சென்றால் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதோடு, தாமதமும் ஆகும். எனவே நான் ஷார்ட் ரூட்டில் உங்களை அழைத்து செல்கிறேன் என சமாளித்து கூறியுள்ளார். சற்று தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கார் சென்றபோது, அந்த பெண் அச்சமடைந்தார். டிரைவரிடம் வாக்குவாதம் செய்து மெயின் ரோடுக்கு திரும்ப சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த டிரைவர் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார், அப்போது அந்தப் பெண் காரின் கதவை திறக்க முற்பட்டுள்ளார். ஆனால் கதவு லாக் செய்யப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

தப்பித்து செல்ல அந்த பெண் முயல்வதை பார்த்த அருண், பெண்ணிடமிருந்த செல்போனை பறித்துக்கொண்டார். இதனால் ஓலா ஆப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் எமெர்ஜென்சி பொத்தானை அழுத்தி உதவி கோர அப்பெண்ணால் முடியவில்லை. இதையடுத்து, அந்தப் பெண்ணின் ஆடைகளை முழுமையாக களையுமாறு அருண் மிரட்டியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.  இப்போது ஆடைகளை களைந்து நிர்வாணமாக தன் முன்னால் நிற்காவிட்டால், எனது நண்பர்களுக்கு போன் செய்து கூப்பிடுவேன். அவர்களும், நானும் உன்னை கூட்டாக கற்பழித்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளார் அந்த டிரைவர். உதவிக்கு யாரும் இல்லாத இடத்தில் சிக்கிக்கொண்ட அந்த பெண், தனது ஆடைகளை களைந்துள்ளார்.

அப்போது அந்தப் பெண்ணை நிர்வாணமாக அவரை பல கோணங்களில் தனது செல்போனில் போட்டோ எடுத்த அந்த டிரைவர், தனது வாட்ஸ் அப் எண்ணுக்கும் அதை அனுப்பியுள்ளார். இதன்பிறகு, அந்த பெண்ணின் பர்சனல் பாகங்களில் கைவைத்து பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.

 
சூழ்நிலை மோசமாக இருப்பதை உணர்ந்த அந்த பெண், தன்னை எப்படியாவது ஏர்போர்ட்டில் விட்டுவிடு மாறும், இங்கே நடந்த இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லமாட்டேன் என்றும் அழுதுள்ளார். இதையடுத்து ஏர்போர்ட்டில் கொண்டு சென்றுவிட்ட அருண், நடந்ததை வெளியே சொன்னால் நிர்வாண போட்டோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், மும்பை சென்ற அந்த பெண், தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர், சுனில்குமாருக்கு இ-மெயிலில் புகாராக அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், கார் மற்றும் டிரைவர் பற்றிய விவரங்களையும் அப்பெண் இணைத்து அனுப்பியிருந்தார்.  இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் புகாரை பதிவு செய்த போலீசார், ஊலா டிரைவரை அருணை கைது செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர்.

பெங்களூர் கமிஷனர் அலுவலகத்தில், முகத்தில் மாஸ்க் அணிவித்து அந்த டிரைவரை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நிறுத்தினர். அந்த டிரைவரையும் காரையும் pஓட்டோ எடுத்துக் கொண்டனர். தனியாக பயணம் செய்த பெண்ணை நிர்வாணமாக்கி போட்டோ எடுத்த சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!